மட்டக்களப்பு – திராய்மடுப் பகுதியில், தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
48 வயது மதிக்கத் தக்க ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த இரவு நேர தெடருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பை நெருங்கியது.
அதில் மோதுண்டே அந்த நபர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.