“எங்களால் முடியும்“ என்ற தொனிப்பொருளில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வவுனியா இளைஞன் சக்கரநாற்காலியில் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
வவுனியா சூடுவெந்த புலவைச் சேர்ந்த முகம்மட் அலி என்ற இளைஞன், வவுனியா மணிக்கூட்டு சந்தியில் இருந்து கொழும்பு நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
“என்னால் நடக்க முடியாது இருப்பினும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. மற்றவர் செய்யும் வேலைகளை எங்களாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் வவுனியாவில் இருந்த கொழும்புநோக்கி சக்கர நாற்காலியில் பயணிக்கஉள்ளேன்” என்று இளைஞன் தெரிவித்துள்ளார்.