அவுஸ்ரேலியாவில் கைதான இலங்கையரால், தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே அவுஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி, அந்நாட்டு ஊடகங்கள் இதுதொடர்பிலான செய்தினை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த குறித்த இலங்கையர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அவர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.