Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமாகாண பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்

February 19, 2018
in News, Politics, World
0

அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமையினால் மீண்டும் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வடமாகாண பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தமது வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாகாண பட்டதாரிகள் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர்.

அந்த கலந்துரையாடலின் போது, கடந்த வருடம் முன்னெடுத்த தொடர் போராட்டத்தைப் போன்று மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் 143 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், வடமாகாண ஆளுநர் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.

ஆனால், அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், இதுவரையில் தமக்கான சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலையில், மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் ஓரிரு வாரங்களில் தமக்கான தீர்வினை அரசாங்கம் தர வேண்டும் எனக் கோரியே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனெனில் பட்டதாரிகளுக்கான சரியான நியமனங்கள் தராத காரணத்தினால், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நல்லாட்சி அரசாங்கம் தமக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கையை முன்வைத்த மகஜர் ஒன்றிணையும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் வடமாகாண பட்டதாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Next Post

முத்தரப்பு பைனலுக்கு நியூசிலாந்து முன்னேற்றம்

Next Post

முத்தரப்பு பைனலுக்கு நியூசிலாந்து முன்னேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures