யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் மரணம் அடைந்துள்ளான்.
மரணமடைந்தவர் 27 வயதுடைய நிலக்காடு காரைநகரை சேர்ந்த குமாரசாமி சுதன் எனும் ஒரு குழந்தையின் தந்தையாவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.