Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோடி இலங்கையின் பிரதமரா? இலங்கை மீது அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?

May 16, 2017
in News
0
மோடி இலங்கையின் பிரதமரா? இலங்கை மீது அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?

இலங்கை இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் ஆற்றிய உரைகளுக்கு கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.

வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதாகவும், அவரின் இலங்கை விஜயம் கலாச்சார ரீதியானதே தவிர அரசியல் செயற்பாடு இடம்பெறாது எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், பிரதமர் மோடியின் உரைகளைப் பார்த்தால், அவ்வாறு தெரியவில்லை. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்க வந்திருத்தால், அவர் வெசாக் பண்டிகையை பற்றிதான் பேசியிருக்க வேண்டும்.

ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பற்றியே அவரின் உரையில் நூற்றுக்கு 75 வீதம் பேச்சு இருந்தது.

இலங்கை மற்றும் இந்தியாவின் இருதரப்பு சந்திப்பு போன்றே அவர் உரையாற்றினார். இது முழுமையான அரசியல் உரையாகும் என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இருநாடுகளின் எல்லைகளூடாக வர்த்தக, முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க வேண்டும் என மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக எட்கா உடன்படிக்கையை விரைவாக கைச்சாத்திட வேண்டும் என மோடி சொல்லாமல் சொல்லிச் சென்றுள்ளதாக கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வேறுபடுத்த முடியாது. நீங்கள் செய்வது எமது பாதுகாப்புக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும். அதனால், உங்களுக்கு (இலங்கைக்கு) ஏற்றாற்போல செயற்பட முடியாது என இந்தியப் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து என்பவற்றின் பங்களிப்பு குறித்து மோடி கூறியதனூடாக அனுமான் பாலம் அமைக்கப்படும் என்ற தகவலை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுமான் பாலம் குறித்து இலங்கை அரசியல்தலைவர்கள் மறைக்கும் விடயத்தை அம்பலப்படுத்தியதற்கு மோடிக்கு நன்றி கூறுவதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது மேல் மற்றும் தென் மாகாணங்களில் சேவையில் ஈடுபடும் அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதும் வழங்குவதாகவும், மலையகத்துக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

இலங்கையில் இவற்றைச் செய்ய அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? அவர் இந்த நாட்டின் பிரதமரா என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையானது இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என நினைத்தே மோடி இவற்றைத் தெரிவித்துள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமது வலது பக்கத்தில் இருந்தவர் இலங்கையின் ஆளுநர் சிறிசேன என்றும், இடது பக்கம் இருந்தவர் இலங்கையின் முதலமைச்சர் ரணில் விக்ரமசிங்க என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் உரையாற்றியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது எமது நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லையா? எனவும் இதன்போது கம்மன்பில கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மோடியை இரகசியமாக சந்தித்த மகிந்த! விபரங்களை வெளியிட மறுப்பு

Next Post

சூழ்நிலையால் அரசியலுக்கு நான் வந்தால்… ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

Next Post

சூழ்நிலையால் அரசியலுக்கு நான் வந்தால்... ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

August 5, 2026
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

August 5, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

ஜனாதிபதியை சந்தித்தார் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி 

August 5, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

August 5, 2026

Recent News

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

August 5, 2026
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

August 5, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

ஜனாதிபதியை சந்தித்தார் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி 

August 5, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

August 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures