இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது இரகசிய சந்திப்பு என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, சந்திப்பு குறித்த விபரங்களை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எங்களுடைய அழைப்பை ஏற்று இந்த சந்திப்பு இடம்பெற்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த சந்திப்பு இரகசியமானது.
எனவே, இந்த சந்திப்பு குறித்த விபரங்களை வெளிப்படுத்த முடியாது. இதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.