Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூதாட்டி பெயரில் அமைந்த சபரிமலை

November 26, 2021
in News, ஆன்மீகம்
0
மூதாட்டி பெயரில் அமைந்த சபரிமலை

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.

சபரிமலை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் பிரதான ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது. ‘கடவுள் பூமி’ என்று அழைக்கப்படும், கேரளாவின் மேற்கு மலைத் தொடரில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, இந்த சபரிமலை ஐயப்பன் திருக்கோவில். மலையின் உச்சியில் 7 மலைகளுக்கு அப்பால் ஐயப்பன் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘சபரி பீடம்’ என்று பெயர். இந்த சபரி என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தால், இது ராமாயண காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

திரேதாயுகத்தில் திருமால், ராமராக அவதரித்திருந்தார். அவர், தசரதரிடம் கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி ஆனது. திருமால் ராமாவதாரம் எடுப்பதற்கு முன்பிருந்தே, ராமபிரானை வழிபடும் நோக்கத்தில் சபரி என்ற பெண், வனத்தில் வசித்து வந்தாள். அவளுக்கு ராமபிரானின் மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் இருந்தது. அவர் என்றாவது ஒருநாள், தன்னை சந்திக்க வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த சபரி, ராமருக்காக தினமும் வனத்திற்குள் சென்று கனிகளை எடுத்து வருவார். அவை ருசியாக இருக்கிறதா என்பதை, அந்த கனிகளை கடித்துப் பார்ப்பார். அதில் இனிப்பு சுவை உள்ள பழங்களை மட்டுமே ராமபிரானுக்காக சேகரித்து வைப்பார்.

ஆனால் சபரிக்கு ராமரைக் காணும் சந்தர்ப்பம் பல ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. ராவணன், சீதையைக் கடத்திச் சென்று விட்டதை அடுத்து, சீதையை தேடி காடுகளில் அலைந்தபோது, சபரி என்ற முதிய பெண், ராமருக்காக காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியை சந்திக்கச் சென்றார், ராமபிரான். அவரைக் கண்டதும் ஆவலில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

ஸ்ரீராமனுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த இலந்த பழங்களை அவருக்கு கொடுத்தார். அது சபரி அன்னை கடித்து எச்சில் படுத்திய பழங்களாக இருந்தாலும் கூட, அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்த ராமர், இலந்த பழங்களை ருசித்து சாப்பிட்டார். பின்னர், சபரி அன்னைக்கு மோட்சம் அளித்ததோடு, அந்த அன்னை வாழ்ந்து வந்த மலைக்கும் மோட்சம் அளித்தார். அன்றிலிருந்து அந்த மலையும் ‘சபரிமலை’ என்றே அழைக்கப்பட்டது.

பின்னர் ஐயப்பனின் அவதாரம் நடைபெற்ற தருணத்தில், தான் அமைதியாக தியானம் செய்ய ஐயப்பன் இந்த மலையை தேர்வு செய்தார். அதில் சபரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ன எண்ணமும் இருந்தது. தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை.

உடனடியாக பரசுராமரை அழைத்து தனக்கு அம்பு விழுந்த இடத்தில் கோவில் எழுப்புமாறு கூறிவிட்டு தேவலோகம் சென்று விட்டார். ஐயப்பனின் கட்டளையை ஏற்று பரசுராமர் கோவில் எழுப்பிய இடமே சபரிமலை என்றும், சபரி பீடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அனைத்து தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்

Next Post

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ

Next Post
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures