1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன.
மார்செய்யின் பதினொறாவது பிரிவில் உள்ள chemin des Escourtines இல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட இளைஞன் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர் என்றும், இது ஒரு பழிவாங்கல் கணக்குத் தீர்த்தல் படுகொலை எனவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த சிறிது தூரத்தில், ஒரு சிற்றுந்து தீமூட்டிக் கொழுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இது கொலையாளிகளின் சிற்றுந்துதான் என்பதனை இன்னமும் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜனவரியில் இருந்து மார்செய்யில் நடந்த நான்காவது கொலை இது என்பது குறிப்பிடத்தக்து.