கம்பஹா, நெதகமுவ – அரசமர சந்தியில் இன்று (4) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது நபர் ஒருவர் படுகாயங்களுடன் கம்பஹா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீதே, இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட குரோதம் சம்பவத்துக்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.