Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் – சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

July 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான்  நல்லிணக்கமா? |  அம்பிகா

தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்திருக்கும் அரசியல்மயமாக்கலைக் காண்பிப்பதாகவும்  சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 தொழிற்சங்க நடவடிக்கைகள் புற்றுநோயைப் போல சமூகத்தின் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்திவருவதாக அண்மையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இக்கருத்து தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அரச அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி பொதுவான அல்லது அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதன் மூலம் ஓர் அரசியல்வாதியைப்போன்று செயற்படுகிறார் எனவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்துள்ள அரசியல்மயமாக்கலைக் காண்பிக்கிறது எனவும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ‘சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதும், பொலிஸார் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைப் பின்பற்றி செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே பொலிஸ்மா அதிபரின் கடமையாகும். ஆனால் பொலிஸார் மனித உரிமைகளை மீறியும், சட்டம், ஒழுங்கைப் புறந்தள்ளியும் செயற்படும் சூழ்நிலையில் பொலிஸ்மா அதிபர் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதானது எவ்வகையிலும் அவரது கடமைக்கு உட்பட்ட செயலன்று. மாறாக இது அவர் அவரது கடமையை நிறைவேற்றுவதற்குத் தவறியிருப்பதையே காண்பிக்கின்றது’ எனவும் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 அத்தோடு அண்மையகால தொழிற்சங்க நடவடிக்கையை நியாயப்படுத்துவது அல்லது அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒருபுறமிருக்க, தொழிற்சங்கத்தை உருவாக்குவதும், அதில் அங்கம் வகிப்பதும், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதும் அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் எனத் தெரிவித்துள்ள அவர், கருத்திற்கொள்ளப்படாமல் இருந்த  தொழிலாளர் உரிமைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாகவே வென்றெடுக்கப்பட்டன என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் 

Next Post

1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேற்றம்

Next Post
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures