கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இயக்க பலரும் முயற்சி எடுத்து தோற்று விடட நிலையில், தற்போது மணிரத்னம் களம் இறங்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பட்ஜெட்டில் தயாராகிறது.
இந்த படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், சத்யராஜ், ஜெயராம், ஐஸ்வர்யாராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலாபால் என பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்(தகவல்).
தற்போது ‛ராங்கி’ உள்பட சில படங்களில் நடித்து வரும் த்ரிஷாவும் பொன்னியின் செல்வனில் இணைந்திருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஆக, ‛ஆயுத எழுத்து’ படத்திற்கு பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார் த்ரிஷா.