ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் ஆதித்யா என்பவரும் இணைந்துள்ளார். இவர் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆவார். ஏற்கனவே ரஜினியின் 2.0, பேட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர், இப்போது மூன்றாவது முறையாக தர்பாரிலும் இணைந்துள்ளார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஆதித்யா.
ரஜினி வளர்ந்து வந்த காலத்தில் அவரது பில்லா, தில்லு முள்ளு உள்பட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இப்போது அவரது பேரனும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.