பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை அலியாபட் நடிக்க, வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
படம் பற்றி அலியாபட் கூறுகையில், இந்தியாவில் உள்ள இயக்குனர்களில் சஞ்சய் லீலா பஞ்சாலி, ராஜமவுலி ஆகிய இருவரும் எனது கனவு இயக்குனர்களாக இருந்தார்கள். அவர்களின் படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன்.
அதனால் தான் ஆர்ஆர்ஆர் பட வாய்ப்பு வந்தபோது பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அதோடு இந்த படத்தில் நான் ஹீரோயின் என்றாலும், எனது கேரக்டர் படம் முழுக்க வராது. அதேசமயம் அதை கெஸ்ட் ரோல் என்று சொல்லிவிட முடியாது என்று சொன்ன அலியாபட், சிறிய வேடமாக இருந்தாலும் நான் கவலைப்படவில்லை. ராஜமவுலி படத்தில் நடித்த மகிழ்ச்சி ஒன்றே எனக்கு போதும் என்கிறார்.