பிரான்சில் லொரியால் மோதி 80 பேர் பலி!!! பதை பதைக்கும் காட்சிகள்….

பிரான்சில் லொரியால் மோதி 80 பேர் பலி!!! பதை பதைக்கும் காட்சிகள்….

பிரான்சில் மத கூட்டம் ஒன்றில் கண்டய்னர் லொரியால் மோதி 80 பேர் பலி( Video) பிரான்சில் நைஸ் நகரில் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லொறியை பயங்கரவாதி ஒருவன் ஏற்றி வெடிக்க வைத்ததில் 80 பேர் பலியாகி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் நீஸ் (Nice) பகுதியில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது, கனரக வாகனம் ஒன்று கூட்டத்தினரை இடித்துச் சென்றதில் 80 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். கனரக வாகனம் ஒன்று, அதிகவேகமாக கூட்டத்தினருக்குள் நுழைந்ததாலேயே இக் கோரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து ஏலவே பரிஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக மற்றும் விரிவான செய்திகள் இதோ.

நேற்று, பிரான்சின் சகல பகுதிகளிலும் தேசிய தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. nice பகுதியில் இடம்பெற்ற வாணவேடிக்கைகளை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தார்கள். அப்போது இரவு 11.30 மணிக்கு, யாரும் எதிர்பார்த்திராத வேளையில், கூடத்தினருக்குள் கனரக வாகனம் ஒன்று நுழைந்து, மக்களை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது. இதன்போது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு Nice மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிக நெருக்கமாக இருந்த பொதுமக்களிடையே வாகனம் நுழைததால் பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். மேலும் இரண்டு கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வாகனம் கூட்டத்தினரை இடித்து தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கனரக வாகனத்தை செலுத்தி வந்தவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Nice நகர முதல்வர் Christian Estrosi தெரிவிக்கும் போது, கூட்டத்தினர் மீது வானகத்தை மோதச்செய்து விட்டு, தொடர்ந்து துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டு கொன்றிருக்கிறான். அதன் போது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கனரக சாரதி எதிர் தாக்குதல் நடத்தியதில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்! என தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு பல தேச தலைவர்கள் கண்டணங்களையும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தேசிய தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்தும், பிரதமர் மனுவல் வால்சும் கலந்துகொண்டிருந்தனர். சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து, அதிகாலை 1.30 மணிக்கு அவசரமாக பரிஸ் அழைத்து வரப்பட்டார். அதை தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் ஜனாதிபதி.

Nice நகர மக்களுக்கு, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை தொடர்ந்து, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், Safety Check வசதியினை Nice பகுதிக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என அறிந்துகொள்ள முடியும்.

வாகனத்தை செலுத்தி வந்த சாரதி, 31 வயதுடைய Tunisian குடியுரிமை கொண்டவர் எனவும், Nice பகுதியில் வசித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் ஏற்கனவே நன்கு அறிவர் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஏலவே காவல்துறையினர் போலி துப்பாக்கி வைத்திருத குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டிருந்தார் என BFMTV வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து அறிய முடிகிறது.

மேலும், சற்று முன்னர் அவசர காலச்சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து தெரிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் இடம்பெற்ற Promenade des Anglais பகுதி போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. அப்பகுதி முழுவதும் தடை விதிக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சிதறி கிடக்கும் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.peransperans01perans02perans03perans04perans05perans06perans07perans08perans09perans10perans11perans12perans13perans14perans15perans16perans17perans18perans19perans20

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News