Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வடக்கு விஜயம்

February 13, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) வியாழக்கிழமை வட பகுதிக்குச் செல்லவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்துகொள்வார். நாளை காலை 9.30 இற்கு வலிகாமம் பிரதேச செயலகத்தின் புதிய  கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

பிற்பகல் 10.30 இற்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் வீடமைப்பு மற்றும் மீள் குடியேற்றம், மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் குறித்த கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கின்றார்.

பிற்பகல் 2 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்துச் சேவை பிரிவைத் திறந்து வைக்கும் பிரதமர், அதனையடுத்து மூன்று மணிக்கு பலாலி விமான நிலையத்தைப் பார்வையிடச் செல்வார்.

மாலை 3.45 இற்கு மயிலிட்டி கிராமத்தில் மீள் குடியேற்ற வீடமைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நடும் வைபவத்திலும் பிரதமர் கலந்து கொள்வார். அத்துடன் மாலை 4.30 இற்கு காங்கேசன்துறை துறைமுகத்தைப் பார்வையிடவுள்ளார்.

மறுதினம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், அன்று காலை 9.இற்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உபகரணங்களை கையளித்து விபத்துப் பிரிவுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.

முற்பகல் 10.30 இற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, வீடமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்த மாநாடும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அன்று பிற்பகல் 2.30 இற்கு மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்து மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் வீடமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முன்னேற்ற கலந்துரையாடலிலும் பிரதமர் கலந்துகொள்வார்.

மாலை 4 மணிக்கு மன்னார் பள்ளிமுனையில் மீள்குடியேற்றக் கிராமத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் வைபவமும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாலை 4.30 இற்கு மன்னார் மத்திய பஸ் நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் பிரதமர் உரையாற்றுவார்.

மறு நாள்16 ஆம் திகதி சனிக்கிழமை பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து காலை 10.30 இற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகததில் நடைபெறும் மாவட்ட வீட்டுத் திட்டம், மீள்குடியேற்றம், மாவட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார்.

Previous Post

ரிஸானா விடயத்தில் அக்கறை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன்?

Next Post

பாட விதானத்தில் நாட்டு சட்டத்தையும் ஒரு பகுதியாக சேர்க்க முஸ்தீபு

Next Post

பாட விதானத்தில் நாட்டு சட்டத்தையும் ஒரு பகுதியாக சேர்க்க முஸ்தீபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures