பாகிஸ்தானில் ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தில், ஹவேலியான் நகரில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உள்ளூரின் பிரபல அரசியல்வாதிகளில ஒருவரான ஆதிப் முன்சிப் கானும் (42) இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையிலான ஒரு தசாப்த காலத்துக்கு மேலான பகையே இச்சம்பவத்துக்குக் காரனம் என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
ஆதிப் முன்சிப் கான் உட்பட 11 பேர் பயணம் செய்த வாகனம் மீது இரு புறங்களிலிருந்து 5 பேர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் பொலிஸ் அதிகாரி ஒமர் துபைல் தெரிவித்துள்ளார்.
இதனால் வாகனத்திலிருந்த அனைவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அத்துடன் வாகனம் தீப்பற்றியதால் உடல்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு தீக்கரையாகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நடந்த உள்ளூ;ர தேர்தலில் முன்சிப் கான் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். பின்னர் அவர், இம்ரான் கான் தலைமையிலான பிரிஐ கட்சியில் இணைந்தார்.