பயங்கர மோதலில் மோட்டர்சைக்கிள் காரர் கொல்லப்பட்டார்.
கனடா-ரொறொன்ரோ, பிரம்ரனில் இடம்பெற்ற கொடிய வாகன மோதல் விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் கொல்லப்பட்டார்.
கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியுள்ளது.பிரம்ரனில் றதவோர்ட் வீதி மற்றும் மடொக் டிரைவ்விற்கு அருகாமையில் பிற்பகல் 6மணியளவில் இந்த கொடிய விபத்து நடந்துள்ளது.மோட்டார்சைக்கிள் காரர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இவர் பிரம்ரனை சேர்ந்தவர் என்றும் இவருக்கு 51 வயது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதி விசாரனைக்காக நீண்ட நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது.