பயங்கரமாக மோதிக் கொண்ட வீரர்கள்! மைதானத்தில் அதிர்ச்சி நிகழ்வு
கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், பிடியெடுப்பு முயற்சியில், 2 வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் Barbados Tridents, St Kitts and Nevis Patriots அணிகள் மோதின.
இதில் Barbados Tridents அணிக்கு டிவில்லியர்ஸ் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். அப்போது 19வது ஓவரின் ஒரு பந்தை அவர் பவுண்டரி நோக்கி தூக்கி அடித்தார்.
இந்நிலையில் அந்த பந்தை பிடிக்க முயற்சித்த St Kitts and Nevis Patriots அணியின் ஜே.ஜே.ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவேல் ஆகியோர் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சுருண்டு மைதானத்தில் வீழ்ந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த கிரான் பவேல் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்தப் போட்டியில் Barbados Tridents அணி 25 ஓட்டங்களால் St Kitts and Nevis Patriots அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.