Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

படப்பிடிப்பு தளத்தில் கதறி அழுத சாந்தனு

May 3, 2023
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’ முதல் பாடல் வெளியீடு

”இராவண கோட்டம் படப்பிடிப்பின் போது விரும்ப தகாத நிகழ்வுகளின் காரணமாகவும், சில மனிதர்களின் சுயநலம் காரணமாகவும் எமக்கு ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் அதிகரித்து, படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வாகனத்திற்குள் சென்று தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன்.” என அப்படத்தின் நாயகனும், நட்சத்திர வாரிசு நடிகருமான சாந்தனு பாக்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

திட்டக்குடி கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாராகி, மே 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.

இந்த திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, இளவரசு, சஞ்சய், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது.

இதன் போது நாயகன் சாந்தனு பாக்கியராஜ் பேசுகையில், ”தயாரிப்பாளர் கண்ணன் ரவி எம்முடைய தந்தையாரை சந்தித்து, ‘சாந்தனுவிற்கு பொருத்தமான படைப்பை ஒன்றை தெரிவு செய்து, அவரை மீண்டும் முன்னணி நட்சத்திரமாக்குவேன்’ என்றார். இதற்காக நான்காண்டுகளுக்கு முன் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் விவரித்த கதையை கேட்டு சிறிய முதலீட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். ஆனால் திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டிற்குள் படத்தின் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. இது தொடர்பாக ஆராயும் போது சில மனிதர்களின் சுயநலம் காரணமாக நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். அதனை எம்மால் தாங்கிக் கொள்ள இயலாததால் படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் கூட வாகனத்தில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன். அதன் பிறகு சில மாற்றங்களை மேற்கொண்டு, மீண்டும் கடினமாக உழைத்து திட்டமிட்டு இப்படத்தின் பணிகளை நிறைவு செய்திருக்கிறோம்.

ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் கடுமையான வெயில் காலகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இருப்பினும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உற்சாகமும், ஊக்கமும் அளித்து தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி, படத்தின் பணிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக பூர்த்தி செய்தோம். பல தடைகளைக் கடந்து இந்த திரைப்படம் மே 12 ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இந்நிகழ்வில் குணச்சித்திர நடிகையும் நகைச்சுவை நடிகையுமான தீபா சங்கர், ”தமிழகத்தின் கிராமப்புறங்களில் திருமணமான பெண்களை அவர்களது கணவர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வில் அனைவரும் பங்கு பற்ற வேண்டும்” என உணர்வுபூர்வமாக கேட்டுக்கொண்டார். இது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

Next Post

இந்தியாவில் வரலாறு படைத்தது இலங்கையின் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம்

Next Post
இந்தியாவில் வரலாறு படைத்தது இலங்கையின் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம்

இந்தியாவில் வரலாறு படைத்தது இலங்கையின் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures