பங்களாதேஷ் தாக்குதல்: கைது செய்யப்பட்ட ரொறன்ரோ மாணவன் தொடர்ந்தும் தடுப்பு காவலில்!

பங்களாதேஷ் தாக்குதல்: கைது செய்யப்பட்ட ரொறன்ரோ மாணவன் தொடர்ந்தும் தடுப்பு காவலில்!

பங்களாதேஷில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரொறன்ரோ பல்கலைகழக மாணவனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கைது செய்யப்பட்ட குறித்த 22 வயது இளைஞன் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்தே நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 20 பேர் காவுகொள்ளப்பட்ட ஜூலை தாக்குதலுக்கும் குறித்த இளைஞனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற குறித்த இளைஞனின் குடும்பத்தாரும், நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கைது செய்யப்பட்ட ரொறன்ரோ மாணவனை விடுவிக்க பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News