Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நியூஸிலாந்து குவித்த 401 ஓட்டங்கள் வீண்போனது | டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பாகிஸ்தான் வெற்றி

November 7, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
நியூஸிலாந்து குவித்த 401 ஓட்டங்கள் வீண்போனது | டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பாகிஸ்தான் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் (DLS) முறைமையில் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

பக்கார் ஸமான் குவித்த அபார சதம், அணித் தலைவர் பாபர் அஸாம் பெற்ற அரைச் சதம் ஆகியனவும் அவர்கள் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 194 ஓட்டங்களும் பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தன.

இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமை அமுலுக்கு வந்ததால் அது பலனற்றுப் போனது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 402 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது சீரற்ற காலநிலையால் இரண்டு தடவைகள் ஆட்டம் தடைப்பட்டதால் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வெற்றி இலக்கு திருத்தப்பட்டது.

பாகிஸ்தான் 21.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பிற்பகல் 5.00 மணியளவில் தடைப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் நியூஸிலாந்தைவிட 10 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது.

மழை விட்ட பின்னர் மாலை 6.20 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.

ஆனால், 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இரண்டாவது தடவையாக மாலை 6.40 மணியளவில் தடைப்பட்டது.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இந் நிலையில் ஆட்டம் வெட்டு நேரப்படி (கட் ஓவ் டைம்) 7.40 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட, டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பாகிஸ்தான் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அப்துல்லா ஷபிக் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த பக்கார் ஸமானும் பாபர் அஸாமும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 138 பந்துகளில் 194 ஓட்டங்களைப் பகிர்ந்து டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பாகிஸ்தானை முன்னிலையில் இட்டு பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பக்கார் ஸமான் 81 பந்துகளில் 11 சிக்ஸ்கள், 8 பவுண்டறிகள் உட்பட 126 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 63 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட் 66 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 401 ஓட்டங்களைக் குவித்தது.

டெவன் கொன்வேயும் ரச்சின் ரவீந்த்ராவும் 55 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கொன்வே 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து ரவீந்த்ராவும் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 141 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை நல்ல நிலையில் இட்டடனர்.

ஆனால், இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்று வந்த கேன் வில்லியம்ஸன் தனது மீள்வருகையில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 79 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ரச்சின் ரவிந்த்ரா 94 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் ரவீந்த்ரா குவித்த 3 சதம் இதுவாகும்.

மத்திய வரிசையில் க்ளென் பிலிப்ஸ் (48 ஓட்டங்கள்), மார்க் செப்மன் (39), டெரில் மிச்செல் (29), மிச்செல் சென்ட்னர் (26 ஆ.இ.) ஆகியோரும் நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

ஆனால் அவை அனைத்தும் சீரற்ற காலநிலையில் வீண்போயின.

பந்துவீச்சில் மொஹமத் வசிம் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Previous Post

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து நொக் அவுட் ஆனது | அரை இறுதியை நோக்கி நகர்கிறது அவுஸ்திரேலியா

Next Post

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Next Post
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures