எமது நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய பணம் எமது நாட்டுக்குள்ளே உள்ளதாகவும், அதனை சிலர் சூரையாடி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று (22) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப கூடிய பணம் நாட்டிற்குள் உள்ளது. வெளிநாட்டு கடன்களையும் அடைத்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய வசதியும் உள்ளது. இந்தப் பணம் இப்போது நமது நாட்டு அரசியல்வாதிகள் சிலரின் வீடுகளிலேயே இருக்கின்றது.
இலங்கையில் 72 வருட காலமாக வீணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள் என்று அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபொன்று இதுவரை காலமும் இந்த நாட்டின் மக்களுடைய பொது சொத்துகளையும் சூரையாடி வாழ்ந்த அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி இட்டு தமது உழைப்புக்கு அப்பால் மேலதிகமான சொத்துகளை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை மீட்டு மக்கள் சொத்தாக மாற்றி புதிய ஆட்சியை கொண்டு செலுத்துவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.