Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

July 9, 2020
in News, Politics, World
0

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டம், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக தொற்று நீக்கல் சட்டவிதிகளுக்கு அமைய கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அவர் சார்பில் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியாது எனவும் வேட்பாளரின் உறவினர்கள் அல்லாத ஏனையவர்கள் இவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வேட்புமனுத் தக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரான ஒருவாரம் காலம் வரையில் எவ்வித விழாக்களிலும் வேட்பாளர்கள் கலந்துக் கொள்ளக்கூடாது என்றதுடன் சமய நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று பேர் மாத்திரமே வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியும் என்பதுடன் வேட்பாளர்களின் கட்சியின் கொள்கைத் திட்டம், சின்னம், அவர்களது போட்டி இலக்கம், புகைப்படம், துண்டுப்பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று கையளிக்க முடியும் என்றாலும் வாகனங்களில் அதனை காட்சிப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளுக்குச் சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும்போது, குறித்த வீட்டு உறுப்பினர்களுக்கு இடையூறை ஏற்படுத்தாத வகையில் பிரசாரங்களை மேற்கொள்வதுடன் ஒலிபெருக்கிகளை உபயோகிக்கக் கூடாது எனவும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கம், புகைப்படம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்று நீக்க சட்டவிதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகளுக்கமைய காலை 7 மணி தொடக்கம் இரவு எட்டு மணிவரையிலேயே பிரசாரங்களில் ஈடுப்பட முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைவிட, வேட்பாளர்களின் கட்சி, கொடி மற்றும் பதாதைகளை பிரசாரக் கூட்டம் இடம்பெறும் தினத்திலும் கூட்டம் நடைபெறும் இடத்திலும் மாத்திரமே காட்சிப்படுத்த முடியும் என்பதுடன் வேட்பாளர், அவரின் சொந்த வாகனத்தில் அவரது கட்சியின் சின்னம், இலக்கம் மற்றும் கட்சியின் கொடியை காட்சிப்படுத்தலாம். ஆனால் வாகனத்தின் பொதுவான நிறத்தை மாற்றும் வகையிலோ பின்பகுதி கண்ணாடியை மூடும் வகையிலோ காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பிரசாரக் கூட்டகளை நடத்துவதற்காக பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் சிறியளவிலான கூட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் கடக்கும் வரையில் எந்தவித கூட்டங்களையும் நடத்தக் கூடாது என்ற அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஓகஸ்ற் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடைபெறும்போது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் பொது இடங்களில் அவரது புகைப்படம், சின்னம், இலக்கம் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதோ துண்டுப் பிரசுரம் வழங்குவதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வேட்பாளர்களுக்கு ஆதவளிக்கும் வகையில் அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சு நிலையத்தினதும், அவற்றில் கருத்து தெரிவிப்பவர்களினதும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறு பதிவுச் செய்யப்படாத துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை வேட்பாளர் இன்றி வேறொருவர் வழங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

இதனைவிட, LED திரை பொருத்தப்பட்ட வாகனங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் மாத்திரமே நடத்த முடியும் எனவும் வீதிகளில் பயணிக்கும் போது பிரசாரம் செய்யமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேரணிகளை நடத்தவோ அதனை ஒழுங்கு செய்வதையோ தவிர்த்துக் கொள்ளவதுடன் மத வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குறித்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்

Next Post

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் இப்போது இல்லை

Next Post

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் இப்போது இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026

Recent News

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures