Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு | நிமால் விநாயகமூர்த்தி

December 11, 2023
in News
0
தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு | நிமால் விநாயகமூர்த்தி

தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு என நாடு கடந்த தமிழீழ உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்று கூடல் Award ceremony – 2023 நிகழ்வு, நேற்று கனடாவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது, 

இலங்கைத் தீவில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக்கும் உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான வேள்விப் போராட்டத்தை ஒரு வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க இராணுவத்தால் சூழப்பட்ட தமிழீழத்தில், முழுக்க முழுக்க இராணுவ முகாங்களால் சூழப்பட்ட தமிழீழத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, அடிமைகொள்ளப்பட்ட தேச மக்களாக எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையிலும் தான் தங்கள் வாழ்வை ஒரு போராட்டமாக அவர்கள் மேற்கொள்ளுகிறார்கள். எனவே தமிழீழ விடுதலை ஒன்றுதான் எங்கள் மக்களின் தீர்வாகவும் தேவையாகவும் தமிழீழத்தின் விடியலாகவும் இருக்கிறது.

கடந்த நவம்பர் 27 – மாவீரர் தினத்தின் வாயிலாக தமிழீழ மக்கள் பெரும் செய்தி ஒன்றை நிலத்தில் இருந்து சிங்கள தேசத்திற்கும் இந்த உலகத்திற்கும் சொல்லியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் கடுமையான அச்சுறுத்தல்கள், தடைவிதிப்புக்கள், அனுமதி மறுப்புக்கள், இராணுவ ஆக்கிரமிப்பின் அச்சுறுத்தல்கள் தாண்டி எமது மக்கள் மாவீரர் தினத்தை தமிழீழ காலத்தைப் போல அனுஷ்டித்துள்ளனர். துயிலும் இல்லங்கள்மீது அடாவடி, மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுக்கள்மீது விசாரணை அச்சுறுத்தல் என பல வடிவங்களில் அடக்குமுறை நிகழ்த்தப்பட்ட போதும் மாவீரர் தினத்தை முன்னெடுப்பதில் தமிழீழ மக்கள் காட்டியுள்ள உறுதி என்பது விடுதலை மீதான பெரு விருப்பும் தமிழீழ தேசம்மீதான பெரும் தாக வெளிப்பாடுமாகும் என்பதை உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  

கடந்த காலத்தில் எங்கள் மண் மிகப் பெரிய இனப்படுகொலையைச் சந்தித்து. இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப்படுகொலை என்று சொல்லப்படுகிற இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் தமிழீழ இனம் சந்தித்திருக்கிறது. அந்தக் காயங்களில் இருந்து எங்கள் மக்கள் இன்னமும் மீண்டெழவில்லை. அங்கங்களை இழந்து, உறவுகளை இழந்து, இனப்படுகொலைப் போருக்கு இனத்தை பலிகொடுத்ததவர்களாக எங்கள் மக்கள் நிற்கிறார்கள். அத்துடன் இனப்படுகொலைப் போர்க்களத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் சரணடைந்து கையளிக்கப்பட்டவர்களையும் தேடுகின்ற மனிதர்களால்தான் எங்கள் தமிழீழ தேசம் இன்று அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும் காரணமாக இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் அதன் வழியாக தமிழீழத்தில் நிரந்தர அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையும் தான் எங்கள் மக்கள் களத்தில் இருந்து தொடர்ந்து பல வகையிலும் வலியுறுத்தி வருகிறார்கள். இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என்பதையும் இனப்படுகொலையாளிகள் அதன் ஊடாகவே தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் எமது மக்கள் கோரி நிற்கிறார்கள். ஆனால் ஸ்ரீலங்கா அரசோ தானே இனப்படுகொலைக்கு விசாரணை நடத்தப் போவதாக சொல்லிச் சொல்லியே இன்றைக்கு 15 ஆண்டுகளைக் கடத்தியுள்ளது.

இனப்படுகொலைக்கான நீதிக்காக புலம் விரைந்தும் வெகுண்டும் மிக அதிகமாகவும் போராட வேண்டும் அல்லது செயற்பட வேண்டும் என்று களம் எதிர்பார்க்கின்றது. களத்தில் குரலை புலம் என்றும் மிக நெருக்கமாக உணர்ந்து செயலாற்றி வருகின்ற நிலையில், நாம் பெரும் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். உலக அனுபவங்களில் இருந்து இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதும் தமிழரின் சுயநிர்யண தேச ஆட்சியைப் பெறுவதும் இன்று நம் முன்னால் உள்ள பெரும் கடமைகள் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து எமது மக்கள் பெரும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். தங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தருவதிலும், தங்களுக்கான விடியலைப் பெற்றுத் தருவதிலும், தங்களுக்கான தேசத்தை அமைத்துத் தருவதிலும் நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் மிக எத்வேகமாக பயணிக்கிறது அல்லது பயணிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில்தான் தமிழீழ மண்ணும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். எமது மக்களின் அந்த நம்பிக்கையை, தாகத்தை நாங்கள் புலத்தில் வலுவுள்ள பலமுள்ள ஒன்றுபட்ட சக்தியாக நின்று நிலைத்து நனவாக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக இவ்விடத்தே வலியுறுத்த விரும்புகிறேன்… என்று அவர் மேலும் தெரிவித்தார். 

Previous Post

கனடாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது

Next Post

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

Next Post
யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures