Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் இல்லை

May 31, 2025
in News
0
தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் இல்லை

உள்ளூராட்சிமன்றங்களில்  ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்துக் கலந்­து­ரை­யாடும் நோக்கில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பதில் செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

 இதன்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இச்­சந்­திப்­பின்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய அர­சியல் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­பது அவ­சியம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­ட­தா­கவும், அதன்­படி தமது இரு கட்­சி­களும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட்டால் அவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் கணி­ச­மான சபை­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கைப்­பற்­ற­மு­டியும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் கஜேந்­தி­ர­குமார் தெரி­வித்தார்.

 அதற்குப் பதி­ல­ளிக்­கையில், இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடியும் எனவும், மாறாக வெறு­மனே தேர்­தலை இலக்­கா­க­வைத்து சபை­க­ளையும், பத­வி­க­ளையும் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­திரம் கூட்­டி­ணை­ய­வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்லை எனவும் எடுத்­து­ரைத்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் தமிழ்த்­தே­சி­யத்தைப் பாது­காப்­ப­தற்கே தமிழ்­மக்கள் ஆணை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், எனவே தமிழ்த்­தே­சி­யத்தை முன்­னி­றுத்தி வாக்கு கோரிய சகல கட்­சி­களும் அதனைப் பாது­காத்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் தான் தமி­ழ­ர­சுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக கஜேந்­தி­ர­குமார் கூறினார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

Previous Post

தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி முரண்பாடுகள் எதுவுமில்லை | அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

Next Post

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

Next Post
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures