ஜனாதிபதி மைத்திரி – ஆந்திர முதல்வர் சந்திப்பு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளில் சந்திரபாபு நாயுடு பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு நாயுடு நேற்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்கள் போன்றனவற்றில் அடைந்துள்ள அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி பாராட்டையும், வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஆந்திர மாநிலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் சந்திரபாபு நாயுடு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.