தமது சக்தி இன்றி எந்தவொரு கட்சிக்கும் அரசர்களை உருவாக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாட்டின் அரசர்களாக வர முடியாது போனாலும், அரசர்களை உருவாக்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுநத்திரக் கட்சி மாறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குப் பலம் அதிகமாகவே இருக்கும். எமக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவு செய்ய வேண்டும் என்ற எந்தவித தேவையும் தமது கட்சிக்குக் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.