இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் விசேட உடன்பாடு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அதற்கு கடன்வழங்கிய நாடுகளிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம் எனினும் விசேட இணக்கப்பாடுகள் குறித்து எதுவும் எங்களிற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.