சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி வீரர் அசத்தல் சாதனை!
சிங்கப்பூரில் நடந்த 30 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் 244 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
சிங்கப்பூர் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 ஓவர்கள் கொண்ட தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மின்னல்ஸ்- அவாத் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மின்னல்ஸ் அணி 30 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 380 ஓட்டங்கள் குவித்தது.
இதில் அந்த அணியின் 34 வயதான ராஜேந்திரன் விஜயபாபு என்ற இந்திய வம்சாவளி வீரர் 102 பந்தில் 244 ஓட்டங்கள் குவித்தார். இதில் 44 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும்.
244 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் அஸ்லாம் பர்வேசின் சாதனையை முறியடித்தார். அஸ்லாம் பர்வேஸ் மார்னர்ஸ் அணிக்கு எதிராக 192 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
பின்னர் விளையாடிய அவாத் அணி 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ராஜேந்திரன் விஜயபாபு கடந்த 1974ம் ஆண்டில் இருந்தே ஐ.சி.சி.யில் இணை உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.