கொழும்பு துறைமுகத்தில் சிசிரிவி கமராக்களை பொருத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட வரைபை இலங்கை துறைமுக அதிகார சபை துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த கமராக்களை பொருத்துவதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் துறைமுகத்தின் வாயில், பொருட்களை ஏற்றி இறக்கும் பகுதிகளில் சிசிரிவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.