நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் ஊதிப் பெருக்கச் செய்யப்பட்டு வருவதாக பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறு, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய சிவப்பு எச்சரிக்கை மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.












