Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 25ஆவது வருடாந்த விருது அளிக்கும் நிகழ்வுடன் ஆட்டம், பாட்டு, கொண்ட்டாட்டம், இனிய உணவு என எல்லாம் கலந்த ஒரு கலவையாக நிகழ்சிகளை வழங்கி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் குதுகலிக்க வைத்தனர்.

April 24, 2016
in Entertainment, Life, News
0

ஸ்காபுரோ பொது வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் முகமாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நிதி சேர் நிகழ்வுகளை வெகுவிமர்சையாக நடத்திவருவதனை நாம் அறிவோம். அந்தவகையில் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 25ஆவது வருடாந்த விருது அளிக்கும் நிகழ்வுடன் ஆட்டம், பாட்டு, கொண்ட்டாட்டம், இனிய உணவு என எல்லாம் கலந்த ஒரு கலவையாக நிகழ்சிகளை வழங்கி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் குதுகலிக்க வைத்தனர். நிகழ்ச்சி திட்டமிட்டதன் பிரகாரம் சரியாக ஆறு மணிக்கு ஆரம்பமாகியது. விருந்தினர்களை வரவேற்குமுகமாக பிரபல ஆங்கில பாடகி பாடல்களை பாட மெகா tuners இன் குழுத் தலைவர் அரவிந்தன் தலைமையில் வாத்தியங்கள் முழங்கியது. விருந்தினர்கள் புன்முறுவலுடன் உள்நுழைந்தனர். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஸ்காபுரோ வைத்தியசாலைக்கான நிதி சேர் நடைபவனியினை நடத்தி வருகின்ற நிகழ்வினையும் நாம் இங்கு குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்கின்றோம். இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் நிதி உதவியினை கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாக நாம் அறிவோம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் அதிகளவான தமிழர்கள் தமது வர்த்தக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ரொரன்ரோ பெரும்பாகத்தில் இயங்கி வரும் வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சைகள் மற்று தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை ஸ்காபுரோ வதைத்தியசாலை வழங்கி வருவதாக மருத்துவ கலாநிதி கிருபா அவர்களை நேரில் சந்தித்தவேளை எனக்கு தெரிவித்தார். இதன் காரணமாக ஸ்காபுரோவிற்கு வெளியில் வாழும் மக்களும் குழந்தைபேற்றிற்கு ஸ்காபுரோ வைத்தியசாலையினை நாடி வருதாகவும் அவர் மேலும் எனக்கு தெரிவித்தார்கள். அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளை ஈடுசெய்வதற்கு ஏதுவாக நாம் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை நவீனமயப்புடுத்துவது இங்கு வாழும் அனைவரினதும் கடமையாகின்றது எனவும் சிரித்தபடி அவர்கள் எனக்கு கூறினார்கள். கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நேற்றிரவு மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்த விழாவிற்கு பெரிய ஒரு வர்த்தக உரிமையாளர் பட்டாளம் வருகைதந்து வர்த்தகர்களுக்கு இடையில் தாங்கள் ஒற்றுமையுடன்தான் செயற்பட்டுவருவதாக இந்தவிழாவின் மூலம் மீண்டும் நீருபித்தனர். Scarborough Convention Center இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. விழா ஆரம்பித்ததில் இருந்து நிறைவடையும்வரை குளிர், சூடான பானங்கள் நிகழ்சிகளை விறு விறுப்புடன் கண்டுகளிப்பதற்கு ஏற்ப நேரத்திற்கு நேரம் வழங்கப்பட்டது. மெகா tuners இன் குழுத் தலைவர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இசை மழையில் சிறப்பான பாடல்களை பாடி மகிழ்விக்க மகதி மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோருடன் கனேடிய பாடகர்களும் இணைந்து அமுதகானமாக பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி சகலரையும் ஒரு நிமிடம் கூட இருந்த இடத்தினை விட்டு அசையாமல் மகிழ்வித்தனர். அரவிந்தன் அவர்கள் தங்களது கைவிரல்களினால் மந்திரயாலங்கள் காட்ட ஏனைய இசைக்கருவிகளை வாசிப்போர் இசை முழங்க பாடகர்கள் சிறப்பான பாடல்களை அசத்தலாக பாட விருந்தினர்கள் ஒவ்வொருபாடல்களின் இறுதியிலும் கரகோஷ முழக்கம் செய்தனர். தென் இந்தியாவில் இருந்துவரும் சகல பிரபல்யமான பின்னணி பாடகர்களுக்கும் இசைவழங்க கூடிய இசைக்குழுவின் தலைவராக அரவிந்தன் அவர்கள் திகழ்ந்துவருவது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கின்றது. குறிப்பாக அரவிந்தன் அவர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் எந்தவிதமான ஒத்திகையும் இல்லாமல் பாடிய அனைத்து பாடல்களுக்கும் மிகவும் அசத்தலாக தங்களது கைவரிசையை காட்டினார்கள். மகதி மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா அவர்கள் இருவருமாக சேர்ந்து அரவிந்தனின் திறமையினை பார்த்து தாங்கள் பெருமைப்படுவதாகவும் குறிப்பாக எந்தவித இலத்திரனவியல் பதிவுகளின் சேர்க்கைகளும் இன்றி தனித்து கை விரல்களினால் கருவியினை கையாளுவதை பார்த்து தாங்கள் அசந்து போனதாகவும் தெரிவித்தார்கள். விசேடமாக ஒரு சில பாடல்கள் விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால்கள் பாடப்பட்டவேளையில் அரவிந்தன் அவர்களும் அதற்கு தங்களது திறமையினை எவ்வித தயார்படுத்தலும் இன்றி சகல இசை கருவி வல்லூனர்களையும் ஒருங்கிணைத்து விழாவின் வெற்றிக்கு வித்திட்டார். உணவு வகைகள் மற்றும் பரிமாறிய விதம் மேற்கத்திய பாணியில் அமைந்திருந்தது. குறிப்பாக பிரதான உணவு தட்டு மற்றும் சாப்பாட்டின் பின்னரான சிற்றுண்டி வகைகள் ஆகியவற்றினை குறிப்பிடலாம். மடபம் நிறைந்த மக்கள், தொழில் அதிபர்கள் பட்டாளம், சிறப்பு விருந்தினர்கள், இனிமையான சிற்றுண்டி வகைகள், உற்சாகத்திற்கு குளிர் பானங்கள் என எல்லாம் நிறைந்த விழா என கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். விழா ஒருங்கினைப்பாளர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

EasyNews Latestnews
easy24news.comlatest

Previous Post

மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தீப்புகை வெளியாவதை குடியிருப்பாளர்கள் பார்த்து பிரமிக்கின்றனர்.

Next Post

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

Next Post

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures