கனடாவில் ஆட்கடத்தல் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் வேண்டுகோள்!
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வலியுறுத்தலை ஒட்டாவாவை தளமாக கொண்டு இயங்கும் ஆட்கடத்தல்கள் தொடர்பிலான செயற்பாட்டு அமைப்பான ‘Voice Found’ விடுத்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல் சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையான சம்பவங்கள் ஒன்ராறியோவிலேயே இடம்பெறுகின்றது. இந்த பிராந்தியங்களே ஆட்கடத்தலின் மையமாக உள்ளன.
இந்த நிலையில் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில், நீண்டகால, நிலையான திட்டங்களை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்கான நிதி அதிகரிப்பினையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
தகவல் சேகரிப்பு, ஆட்கடத்தல்களில் இருந்து மீட்கப்படுவோருக்கான தங்குமிட வசதி என்பவை அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும், சட்ட நுனுக்கங்களும், தொடர்பாடல்களும் அதிகரிக்கப்பட வேண்டும்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.