இந்தியாவின் புனே நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சடலங்கள் ஆறு ஒன்றிலிருந்து மீட்ககப்பட்டுள்ளன.
இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ள பொலிஸார், 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
45 வயதான மொஹான் பவர், அவரின் மனைவி சங்கீதா மோகன் (40), இத்தம்பதியின் மகள் ராணி புல்வாரே (24), மருமகன் (ஸியாம் புல்வாரே (28), 3 முதல் 7 வயதான 3 பிள்ளைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் சடலங்கள் பீமா நதியிலிருந்து கடந்த 18 முதல் 24 ஆம் திகதிவரையான நாட்களில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களின் உறவினர்களான ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவரான அஷோக் பவரின் மகனான தனன்ஜய் பவார் சில மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டிருந்தார். இது தொடர்பாக புனே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டடிருந்தது.
அக்கொலைக்கு மொஹான் பவரின் மகன் காரணம் என அசோக் ஆத்திரம் கொண்டிருந்தார் எனவும். அக்கொலைக்கு பழிவாங்குவதற்காக 7 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.