Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உருவாகும் பயங்கரமான புதிய படைகள்..! அடுத்த இலக்கு மட்டக்களப்பா??

November 22, 2016
in News
0
உருவாகும் பயங்கரமான புதிய படைகள்..! அடுத்த இலக்கு மட்டக்களப்பா??

உருவாகும் பயங்கரமான புதிய படைகள்..! அடுத்த இலக்கு மட்டக்களப்பா??

மகுடிகளின் வாசிப்பிற்கு பாம்புகள் ஆடுவதைப் போல், சிலர் ஆட்டுவிக்க பலர் ஆடுகின்றார்கள், இங்கு மகுடிகளின் நாதம் இனவாதம் என்பது இருட்டறை மெழுகுவர்த்தியைப் போன்றது.

இராணுவப்புரட்சி ஏற்படும் என ஒரு சிலர் எச்சரிக்கை விடுக்க, மறு புறத்தில் முழு நாடும் வேண்டும் என்ற கோரிக்கைகள் பூதாகரமாக வெடித்து வருகின்றது.

“நீ எதுவாக மாறுகின்றாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்பது தற்போது கனகச்சிதமாக “நான் இனவாதி நீயும் இனவாதியாக மாறிவிடு” என்ற வகையில் மாற்றப்படுவது நடைமுறை இலங்கையில் அவதானிக்கக் கூடிய ஒன்றுதான்.

இவை மட்டுமா வடக்கில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வரத்தான் செய்கின்றது, ஆனாலும் பாவம் வடக்கிற்கு இது புளித்துப்போன விடயம்.

இந்த பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளி எது என்று நோக்குவதனை விடவும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே இப்போதைய அரசின் முக்கிய கடற்பாடு, என்பது மட்டும் புரியாத நிலையில் அரசு இப்போதைக்கு இல்லை என்பதும் உண்மைதான்.

கண்டியில் ஒன்று திரண்டுள்ள பிக்குகளும் சிங்கள அமைப்புகளும் அடுத்து மட்டக்களப்பில் ஒன்று திரள ஆயத்தமாகிவிட்டது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைப்பு விடுக்கும் போது தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 23 வருடங்களாக விடுதலைப்புலிகளிடம் அடி வாங்கி மட்டக்களப்பில் நான் சேவை செய்து வருகின்றேன், குண்டுகள் வெடித்து கொத்துக் கொத்தாக அழிந்த இராணுவ வீரர்களை அள்ளி எடுத்தவன் நான்.

இது வரையில் பொறுமையாக இருந்தோம் இனியும் பொறுமை காத்தால் முழு இலங்கையும் அந்நிய மதங்களுக்கு சென்று விடும். இப்போது நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

இப்போது இருக்கும் அமைப்புகளை விடவும் புதிதாக பல அமைப்புகள் உருவாகினாலும் பரவாயில்லை, ஆனாலும் அனைத்தினது நோக்கமும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

நல்லாட்சியை நம்பிப் பயன் இல்லை, நாம் ஒன்று திரள வேண்டும், அடுத்து கூடிய விரைவில் மட்டக்களப்பில் அனைத்து சிங்கள அமைப்புகளும் ஒன்று திரளும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளது எனது இரத்தத்திற்கு புது வேகம் கொடுத்துள்ளது”

இவை சுமணரத்தின தேரரினால் விடுக்கப்பட்ட அழைப்பா? அல்லது மட்டக்களப்பை அழிக்க விடுத்த அழைப்பா? என்பது அவரது பேச்சை கேட்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.

அண்மையில் இந்த ஒரு தேரர் மட்டக்களப்பில் செய்த இனவாதச் சேவையின் எதிரொலிப்பு இன்னமும் பயங்கரமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

இந்த நிலையில் அனைத்து ஒட்டுமொத்த, அதுவும் இனவாதத்தை பகிரங்கமாக பரப்பும் பிக்குகள் மட்டக்களப்பிற்கு படை எடுத்துள்ளனர். இவர்களோடு இணைந்து இனவாதப் பூதங்களும் படையங்கம் வகிக்கும் என்பதில் மட்டும் எந்த வித ஐயமும் இல்லை.

ஆனாலும் விடுதலைப்புலிகளும், முடிந்து போன யுத்தமும் இன்னமும் “சோற்றுக்கு வைக்கும் ஊறுகாய் போல” ஒரு சில பிக்குமார்களும், அரசியல் தலைமைகளும் எடுத்து வைத்து அடிக்கடி சுவை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றது.

அதற்கான காரணம் இவை இரண்டு மட்டுமே இப்போதைக்கு இலங்கையில் பிரச்சினையை தூண்டிவிட இலகுவான வழிமுறைகள்.

எந்தவொரு நிலையிலும் சமஷ்டி, நல்லிணக்கம் அதையும் தாண்டி ஒற்றுமை என்ற மரம் இலங்கையில் வேரூன்ற வேண்டும் எனில் நடக்காது. அரசு இனியும் பொறுமையாக இருந்தால் இனவாதப் பூதம் முழு இலங்கையையும் விழுங்கத்தான் செய்யும்.

அது சரி இலங்கையில் அரசியல் யாப்பை பொறுத்தவரை நேரடியாக இப்போது முளைத்துள்ள சிக்கலை தகர்க்க முடியாது என்பதும் உண்மைத்தான் ஆனாலும் எப்படி அரசு இதனைத் தீர்க்கப்போகின்றது என்பது வெளிப்படையில்லை என தென்னிலங்கை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

பத்தாவது ஆண்டில் ட்விட்டர்! ஆச்சரியப்படுத்தும் சிறப்புகள்

Next Post

ஐரோப்பாவாக மாறுமா இலங்கை?! ஐ.எஸ் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்த கோத்தபாய!!

Next Post

ஐரோப்பாவாக மாறுமா இலங்கை?! ஐ.எஸ் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்த கோத்தபாய!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures