Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கால்பந்தாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள்

April 6, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
3 ஆவது தடவையாக பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 2014 இல் இருந்து நிதி, நிருவாகம், போட்டி செலவினங்கள் ஆகியவற்றில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோசடிகளில் குற்றவாளிகளாக காணப்படும் நிருவாகிகள் எவரும் எதிர்காலத்தில் சம்மேளனத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகள், நிருவாகம், நிதி, கால்பந்தாட்ட விளையாட்டின் நிலை உட்பட மற்றும் சில விடயங்கள் தொடர்பாக ஆராய விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஒரு மாதத்திற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கையளிகப்பட்டது.

உயர்நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி குசலா சரோஜினி (தலைவர்), ஓய்வுநிலை அமைச்சு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஒய்வுநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் சுகத் நாகாமுல்ல, ஓய்வுநிலை ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் வீரர் சுசில் ரோஹன ராமநாயக்க ஆகியோரைக்கொண்ட விசாரணைக் குழுவினரையே ஒரு மாதத்திற்கு முன்னர் அமைச்சர் நியமித்திருந்தார்.

அந்த அறிக்கை கிடைத்த சொற்ப நேரத்தில் ஊடக சந்திப்பை நடத்துவதால் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல விடயங்களையும் தன்னால் வாசிக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ‘இந்த அறிக்கை எனக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது சில விடயங்களை அக் குழுவின் தலைவர் விளக்கினார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தைப் பொறுத்த மட்டில் அதன் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘அத்துடன் சம்மேளனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கால்பந்தாட்ட விளையாட்டின் மேம்பாட்டிற்காகவும் விளையாட்டு வீரர்களுக்காகவும் 2 வீதம் கூட செலவிடப்படவில்லை எனவும் விசாரணைக் குழுத் தலைவர்  என்னிடம் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் வங்கி வைப்பிலிருந்து 100 மில்லியன் ரூபாவை மீளப் பெற்று நிருவாகிகள் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த விடயமும் வெளியாகியுள்ளது.

‘இலங்கையில் கிரிக்கெட், காலப்ந்தாட்டம், றக்பி உட்பட பிரதான விளையாட்டுக்கள் தொடர்பாக நான் ஆய்வுகளை செய்தேன். அதன் மூலம்  இந்த விளையாட்டுக்கள் யாவும் 10 வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதே தவிர முன்னோக்கி நகரவில்லை என்பது எனக்கு அறியக்கிடைத்தது. 

இந்த சரிவைப் போக்கி அவ் விளையாட்டுக்களை உயரிய நிலைக்கு கொண்டுசெல்ல  குறுகிய கால, நடுத்தர கால, நீண்டகால திட்டங்களை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். எனவே விளையாட்டுத்துறையில் இடம்பெறும் சகலவிதமான மோசடிகளையும் இல்லாதொழிக்க கடும் நடவடிக்கை எடுக்க உள்ளேன்’ என்றார்.

இதேவேளை, 249 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை ஆங்கலத்தில் மொழிபெயர்த்து பீபாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, பீபாவினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமானால் சம்மேளனத்தின் பொதுச் சபையைக் கூட்டி பீபாவின் கோட்பாடுகளுக்கு அமைய யாப்பு விதிகளை திருத்தி அமைத்து தேர்தல் குழு ஒன்றை நியமித்து தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுப்பீர்களா? என பிரத்தியேகமாக அமைச்சரிடம் கேட்டபோது, ‘நிச்சயமாக அதனை செய்யமுடியும். 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனப் பொதுச் சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடி கால்பந்தாட்ட விளையாட்டை மட்டுமல்லாமல் நிருவாகத்தையும் நேரிய வழியில் கொண்டு செல்ல நான் தயாராக இருக்கிறேன்’ என பதிலளித்தார்.

அத்துடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபை செயலிழந்துள்ளதால் 75 ஊழியர்களுக்கு சம்பளம், புதுவருட போனஸ் என்பன கிடைக்காமலிருப்பதாக சுட்டிக்காட்டியபோது, சம்பளம் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

Previous Post

காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

Next Post

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026

Recent News

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures