Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை உலுக்கிய ஹிஷாலினி மரணம்! என்ன நடந்தது? ரிஷாட் பாராளுமன்றில் விளக்கம்!

August 6, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையை உலுக்கிய ஹிஷாலினி மரணம்! என்ன நடந்தது?  ரிஷாட் பாராளுமன்றில் விளக்கம்!

ஹிஷாலினியின் மரணம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிகவும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்கும்போதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஹிஷாலினி 16 வயதைக் கடந்ததன் பின்னரே எமது வீட்டுக்கு தரகர் ஊடாக வருகை தந்தார். அவருக்கு தனியறை வழங்கப்பட்டதோடு, அதனுள் குளியலறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.

ஹிஷாலினி எமது வீட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஒரு நாளேனும் ஹிஷாலினியை பார்ப்பதற்காக வரவில்லை. ஆனாலும் நாங்கள் சகோதரி ஹிஷாலினிக்கு எந்தவொரு குறைகளையும் வைக்கவில்லை. அவரை நன்றாகவே கவனித்து வந்தோம்.

 கடந்த 3ஆம் திகதி காலை 6.45 மணியளவில் ஹிஷாலினி தீ வைத்துக்கொண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு எனது மாமாவும் மாமியும் என்ன செய்வதென்றே அறியாமல் அந்த தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

எனினும் முடியவில்லை என்பதால், அருகில் இருந்த நீச்சல் தடாகத்தில் குதிக்குமாறு தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் அவரது உடலில் உள்ள தீயை கடும் போராட்டத்திற்கு பின்னரே அணைத்துள்ளனர்.

அதன்பின்னர், 1990 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி, ஹிஷாலினியை சரியாக 7.33 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், பொலிஸாரோ அவரை 8 மணிக்கு பின்னரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்டேன்.

ஹிஷாலினி இறக்கும் நாள் வரையில் தினமும் எனது மனைவி அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்று வந்தார். அவருடைய உடலில் பெரும் பகுதி பாதிப்படைந்துள்ளதாகவும் அதனை சரிசெய்ய அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமெனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக 10 இலட்சம் வரையில் செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை எனவும் ஹிஷாலினி எமக்கு மீண்டும் தேவையெனவும் எனது மனைவி மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு நாங்கள் ஒவ்வொரு நாளும் ஹிஷாலினியை குணப்படுத்துவது தொடர்பாக முயற்சித்து வந்தோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அவர் வைத்தியசாலையில் இருந்த நாள் வரையில் ஹிஷாலினியின் தாய் வைத்தியசாலைக்கு வந்து சென்றதாகவும் சுமூகமாக உரையாடி இருந்ததாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் அவர் இறந்ததன் பின்னர் அவரது தாய் உண்மைக்கு புறம்பாக சில அரசியல்வாதிகளின் கருத்துக்கு செவிசாய்த்து, சில ஊடக விபச்சாரிகளோடு சேர்ந்து வேறொன்றை சொல்கிறார்.

ஹிஷாலினிக்கு இருட்டறை வழங்கப்பட்டதாகவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒருமுறைகூட எமது வீட்டுக்கு வராமல் எவ்வாறு இப்படி தெரிவித்தார் என்பது எனக்கு புரியவில்லை.

எந்தவொரு குற்றமும் செய்யாமல் எனது மனைவியும் மாமாவும் மைத்துனரும் விளக்கமறியிலில் இருக்கிறார்கள். இன்னும் எனது பிள்ளைகள் இருவர் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள். அவர்களை மட்டுமே விட்டுவைத்திருக்கிறார்கள்.

ஹிஷாலினி எமது வீட்டுக்கு பணிக்கு வந்தவுடன் அவரது பெற்றோருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் அவர் பணியாற்றிய 7 1/2 மாத காலப்பகுதியில் 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதோடு, அவர் இறந்ததன் பின்னர் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

எனவே, ஹிஷாலினி மரணத்தில் எந்தவொரு சந்தேகமும் இருக்கக்கூடாது. இந்த விடயத்தில் முழுமையான விசாரணைகள் இருக்க வேண்டும்.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெறுவது அவசியம். குற்றவாளி யாராக இருந்தாலும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனா தொற்று அதிகரிப்பு! நாட்டை முடக்குவதா, இல்லையா? – இன்று தீர்மானம்!

Next Post

டோக்கியோ ஒலிம்பிக்: 34 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் நிற்கும் நாடு இதுதான்!

Next Post
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

டோக்கியோ ஒலிம்பிக்: 34 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் நிற்கும் நாடு இதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures