சுவிற்சர்லாந்து – இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் (Edelweiss Air) இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது.
இன்றைய தினம் காலை 221 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.