Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர் கரிசனையுடன் செயலாற்றிவருகிறோம் | பிரிட்டன் அரசு

December 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதியுங்கள் -பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. அக்கடிதத்தில், ‘எதிர்வரும் செப்டெம்பர்மாத (நடைபெற்றுமுடிந்த) ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

 அதுமாத்திரமன்றி, ‘இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரிட்டனில் நடைமுறையில் உள்ள உலகளாவிய மனித உரிமைகள்சார் தடைகள் சட்டம் போன்ற சகல விதமான தடைகளையும் விதிப்பதற்குப் பின்நிற்கக்கூடாது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் சொத்து மற்றும் பயணத்தடைகளை விதித்துள்ளன. எனவே உலகளாவிய மனித உரிமைகள் கடப்பாட்டுக்கு அமைவாக அமெரிக்கா மற்றும் கனடாவைப் பின்பற்றி பிரிட்டனும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க முன்வரவேண்டும்’ என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

 அக்கடிதத்துக்குப் பதிலளித்து பிரிட்டனின் இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:  

இலங்கை தொடர்பில் நீங்கள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி பிரதமருக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பதிலளிக்கிறேன்.

 நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக மனித உரிமைகளுடன் தொடர்புடைய பரந்துபட்ட கரிசனைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பிரிட்டன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டுவருகிறது. செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலும் எமது கரிசனைகள் குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருந்தோம்.

 இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பிரிட்டன் அரசாங்கமானது ஏனைய இணையனுசரணை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடகாலமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி பிரிட்டனின் தலைமையில் கொண்டுவரப்பட்ட 57/1 தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் பங்கேற்புடனான நிகழ்ச்சித்திட்டமொன்று தொடர்வதற்கு இத்தீர்மானம் வழிகோலியிருக்கிறது. மிகமுக்கியமாக இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் அளிக்கப்பட்டிருந்த ஆணையைப் புதுப்பித்திருக்கிறது.

 மேலும் தடைகளை விதிப்பது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஏனைய பல இராஜதந்திர உத்திகளில் ஒன்றாகும். எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் என்பதால், அவ்விபரங்களை வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Previous Post

15 ஆம் திகதி டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர ; திங்கட்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

Next Post

வனவிலங்குகளை எதுவும் செய்யலாம் | லால்காந்தா சர்ச்சைப் பேச்சு | கிளம்பிய எதிர்ப்பு

Next Post
வனவிலங்குகளை எதுவும் செய்யலாம் | லால்காந்தா சர்ச்சைப் பேச்சு | கிளம்பிய எதிர்ப்பு

வனவிலங்குகளை எதுவும் செய்யலாம் | லால்காந்தா சர்ச்சைப் பேச்சு | கிளம்பிய எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

August 27, 2026
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

August 27, 2026
பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

August 26, 2026
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

August 26, 2026

Recent News

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்

August 27, 2026
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

August 27, 2026
பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

August 26, 2026
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

August 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures