Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் பாதாள உலக குழுவின் தாதாவை கண்டுபிடித்த தமிழக காவல்துறை! வெளிவரும் தகவல்கள்

November 22, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையின் பாதாள உலக குழுவின் தாதாவை கண்டுபிடித்த தமிழக காவல்துறை! வெளிவரும் தகவல்கள்

தமிழ்நாடு காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு, இலங்கை பாதாள உலக உறுப்பினர் ”அங்கொட லொக்கா”வின் நெருங்கிய உதவியாளரான ‘அதுருகிரியே லடியா’ என அழைக்கப்படும் சானுக தனநாயக்கவிடம் விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.

அத்துடன் பெங்களூரில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஜெயபிரகாஷ் என்கிற டி.கோபாலகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் அங்கொட லொக்காவுடன் இலங்கையை விட்டு வெளியேறிய தனநாயக்க, போலி ஆவணங்களை தயாரித்து பெங்களுரில் ஆதார் அட்டையை பெற்றுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் போதைப்பொருள் வியாபாரியான சுரேஷ் ராஜுக்கு பெங்களூருவில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சர்வதேச வலைப்பின்னல் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட ராஜூவின் அறிவுறுத்தலின் பேரிலேயே கோபாலகிருஷ்ணன் இலங்கையரான தனநாயக்கவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ”அங்கோட லொக்கா” கோயம்புத்தூரில் தங்கியிருந்த காலத்தில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், கோவையில் மறைந்திருந்த அங்கொட லொக்கா, 2020 ஜூலையில் இந்தியாவை விட்டு வெளியேற போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் வசித்து வந்த அங்கோட லொக்கா துபாய் செல்ல விரும்பியதாக தமிழக குற்றத்தடுப்பு பிாிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

2021, நவம்பர் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட”அதுருகிரியே லடியா’ என்ற சானுக தனநாயக்கவும் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.

எனினும் 2020 ஜூலை 3, ஆம் திகதி இறக்கும் வரை, கோயம்புத்தூரில் உள்ள சேரன் மாநகர் அருகில் இலங்கைப் பெண்ணுடன் மறைந்திருந்த “அங்கொட லொக்கா” சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அத்துடன் அங்கொட லொக்கா மற்றும் அதுருகிரியே லடியா ஆகிய இருவரும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்றின் அங்கமாக இருந்ததால் அவர்கள் இந்தியாவில் மறைந்திருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா? என்பது தொடா்பாகவும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

லொக்கா மற்றும் தனநாயக்க இருவரும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

எனினும் பிணை கிடைத்த பின்னா் இருவரும் தலைமறைவாக இருந்தனர். அதேநேரம் எதிரி குழுவின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அவர்கள் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை.

இதன் காரணமாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டைப் பெற்று இந்தியாவை விட்டு வெளியேறுவதே அவர்களின் திட்டமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கொட லொக்கா அல்லது சந்தன லசந்த பெரேரா, தமிழகம்- கோவை, பாலாஜி நகரில் தலைமறைவாகத் தங்கியிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக 2020 ஜூலை 3 ஆம் திகதியன்று காலமானார்.

இந்தநிலையில் அவர் தங்கியிருப்பதற்கு உதவியளித்த சிவகாமசுந்தரி என்ற சட்டத்தரணி, அங்கொட லொக்கா, அத்துருகிரிய லடியா என்ற தனநாயக்கவிடம் தமது கைத்துப்பாக்கியை கொடுத்தார் என்ற வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே சானுக தனநாயக்க தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரியும்! வெளிவிவகார அமைச்சரின் பதில்

Next Post

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Next Post
புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures