Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு அமைச்சர்களின் கட்டாய விடுமுறையை இரத்து! வடக்கு முதல்வர் தெரிவிப்பு

June 20, 2017
in News
0
வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்கும் ராஜபக்ஷர்கள்!

மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்து செய்வதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மதத் தலைவர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரின் உறுதியளிப்பை தொடர்ந்தே தான் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

இன்று காலை என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதில் வழங்கியிருக்கின்றார்.

அதில் எனக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுவதாக உறுதியளித்திருக்கின்றார்.

இதேபோல் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய உத்தரவாதம் ஆகியவற்றை தொடர்ந்து இரு அமைச்சர்களுக்கும் வழங்கிய கட்டாய விடுமுறையை விலக்கிக்கொள்கிறேன்.

அதே சமயம் இந்த விடயத்தில் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ளவர்களே விசாரணைகளுக்கு சாட்சியம் வழங்க வேண்டும்.

ஆனால் இவர்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருப்பதால் விசாரணைகளை நடத்த இயலாது. எனவே அது குறித்தும் நாங்கள் கரிசனை செலுத்தவேண்டும் என்றார்.

மேலும், வடமாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர், ஐங்கரநேசன் மீது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பண விரயம் போன்ற குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் விசாரணை குழுவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஐங்கரநேசன் என்னுடன் பேசியிருக்கின்றார். தனது விடயத்தை மீளாய்வு செய்யும்படியும் அவர் கேட்டிருக்கின்றார்.

எனவே, அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருக்கின்றேன். ஐங்கரநேசன் மீது ஊழல், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை.

மாறாக பண விரயம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களே உள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ஒட்டாவாவில் கனடா தின பாதுகாப்பு நடவடிக்கைகள்.

Next Post

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்

Next Post
வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்

வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures