எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ள நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சென்னை அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னை அணியின் மீது விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
சென்னை அணியின் தலைவராக திகழ்ந்த டோனியை மீண்டும் இழுக்க பேச்சுவர்த்தை நடந்து வரும் நிலையில் டோனி வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’தல’ என்று எழுதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸுக்கான மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த போட்டோவை டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.