இடைக்கால அரசின் அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் சாய்த்து கொண்டனர்.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதாரம், கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சாரம், மத விவகாரங்கள், நீர் வழங்கல், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும் பிரதமருடன் 15 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் சாய்த்து கொண்டுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா – நீதி மற்றும் மனித உரிமைகள் சட்ட உருவாக்கம்
ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு
தினேஷ் குணவர்தன – திறன் அபிவிருத்தி, வெளிநாட்டு உறவுகள், தொழில் மற்றும் தொழில் உறவுகள்
டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்
பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதாரம் சுதேச வைத்தியம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் சமூக பாதுகாப்பு
பந்துல குணவர்தன – உயர்கல்வி, புத்தாக்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
ஜனக பண்டார தென்னகோன் – பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி
சமல் ராஜபக்ஷ – மகாவ்லி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்நாட்டு வர்த்தக பாவனையாளர் நலன் அபிவிருத்தி
டளஸ் அழகபெரும – கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுக கப்பற்துறை
விமல் வீரவன்ச – நடுத்தர வர்த்தக தொழிற்துறை, கைத்தொழில்
மஹிந்த அமரவீர – மின்சக்தி, மின்வலு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன – காணி, காணி அபிவிருத்தி, சுற்றாடல் வன ஜீவராசிகள் வளங்கள்
ரமேஷ் பதிரன – பெருந்தோட்ட கைத்தொழில் விவசாய ஏற்றுமதி
பிரசன்ன ரணதுங்க – சுற்றுலா மற்றும் விமானத்துறை கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு