‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ எனப்படும் ‘ரணம் ரத்தம் ரௌத்ரம்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், பொலிவுட் நடிகர் அஜய் தேவகன், பொலிவுட் நடிகை அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர் ‘எனப்படும் ‘ரணம் ரத்தம் ரௌத்திரம்’.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்று படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில், இப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து தான் இயக்குநர் எஸ். எஸ் ராஜமவுலியின் திரையுலக பயணம் சர்வதேச அளவில் விரிவடையுமா…! அல்லது இந்திய அளவிலேயே தொடர்ந்து இயங்குமா…! என்பது தெரியவரும் என்கிறார்கள் திரையுலகினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]