பொலிஸாரினால் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டமைக்குப் பிரதான காரணம் கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடைபெறும் எந்த உத்தியோகபுர்வ அறிவிப்பும் இல்லாமையினாலாகும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்துக்கு வருவபவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள், எங்கு வருகின்றார்கள் என்பது நடாத்துபவர்களுக்கும் தெரியாது. வருபவர்களுக்கும் தெரியாது. குறிப்பாக பொலிஸாருக்கும் தெரியாது. நீதிமன்றத்துக்கும் தெரியாது. இவ்வாறிருக்கும் போது நீதிமன்றத்துக்கு தீர்ப்பு வழங்க முடியாத நிலை உள்ளது.
நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்கு, தந்தையின் கட்சி ஆதரவாளர்களை பலிகொடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கையே ஆகும் எனவும் அமைச்சர் கூறினார்.
கூட்டு எதிர்க் கட்சியினர் இன்றைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியினால் சில முக்கிய இடங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால், தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட மனு கொழும்பு மேலதிக நீதவானினால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.