அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் 1000 பேர் கடற்படைக் கப்பல் மற்றும் போர் விமானம் என்பவற்றுடன் இலங்கையில் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பில்ப் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஏழு நாடுகளில் இந்த யுத்தப் பயிற்சியை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, முதலாவதாக இலங்கையில் பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை படையினர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் சிங்கப்புர் ஆகிய நாடுகளில் இப்பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.