ஸ்காபுறோவில் ஸ்ரீ துர்க்கேஸ்வரத்தில் தெய்வீக நிகழ்வு…
ஸ்காபுறோவில் லோறன்ஸ் அன்ட் விக்டோரியா பார்க் சந்திக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற ஆலயமான ஸ்ரீ துர்க்கேஸ்வரத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வருடாந்த இரதோற்சவம் தெய்வீக மணங்கமழ நடைபெற்றது.
மூன்று இரதங்களில் பிள்ளையார் முருகன், அம்மன் ஆகிய தெய்வ விக்கிரங்கள் வீதி வலம் வந்த காட்சியைக் காண அங்கு ஆயிரக்கணக்கான அடியார்கள் நான்கு வீதிகளிலும் கூடியிருந்தனர்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தியாகராஜக் குருக்கள் கணேச சுவாமிகள் அனைத்து அபிசேகங்கள் மற்றும் கிரியைகள் அனைத்தை மேற்பார்வை செய்த வண்ணம் சிறப்பாக நடத்தினார்.























