Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

July 5, 2016
in News
0
மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

அமெரிக்காவின் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஆர்லாண்டோவில் உள்ள “பல்ஸ்” ஓரின சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன் என்பவர் சரமாரியாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் எட்டி ஜஸ்டீஸ், இறக்கும் தருவாயில், ‘I’m gonna die’… என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்வடையச் செய்த நிலையில், தற்போது,விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் ஒருவர் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த பிரெண்டா லீ மார்க்யூஸ் மெக்கூலுக்கு 11 குழந்தைகள். 49 வயதான மெக்கூல், தனது பிள்ளைகளுடன் வசிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து ஆர்லாண்டோவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மெக்கூல், புகழ்பெற்ற சல்சா நடனமாடுவதற்காக இரவு விடுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மெக்கூல்லின் இளைய மகன் இசைஹா ஓரின சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கடந்த 12ம் தேதி அன்று தனது 21 வயது மகன் இசைஹா ஹெண்டர்சனுடன் நடனமாட ‘பல்ஸ்’ ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதிக்கு சென்றுள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் நியூயார்க் நகரில் நடைபெறும் “Puerto Rican Day Parade” எனும் அணிவகுப்புக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த மெக்கூல் இந்த ஆண்டு ஆர்லாண்டோவில் மகனுடன் இருக்க முடிவெடுத்துள்ளார்.

கடந்த 11ம் தேதி நள்ளிரவு இரவு விடுதிக்கு மகனுடன் சென்றிருந்த மெக்கூல், தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக தனது நண்பர்கள் சல்சா நடனமாடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.

இந்நிலையில், விடுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அப்போது, விடுதியில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

மெக்கூலின் மகன் இசைஹாவை நோக்கி குறிவைத்து உமர் மாட்டீன் சுட முயற்சி செய்த போது, அவருக்கு முன்பாக பாய்ந்த மெக்கூல், “கீழே படு” (Get down) எனக்கூறி மகனை காப்பாற்றியதுடன், உமர் மாட்டீனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

புற்றுநோய்க்கு தான் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்பதால், நான் உயிரிழந்தால் நீங்கள் அதற்காக வருத்தப்படக்கூடாது. முடிந்தால் அதனையும் கொண்டாடுங்கள் என்றே மெக்கூல் கூறி வந்ததாக அவரது மகன்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு: பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு

Next Post

பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி

Next Post

பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures