பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் தீ: மக்கள் வெளியேற்றம்

பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் தீ: மக்கள் வெளியேற்றம்

பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியிலும், அதனைச் சூழவும் உள்ள இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறித்த அரங்குக் கட்டிடத்தின் தென்மேற்கு பகுதியில் தீ மூண்டமையினாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தின் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பீல் பிராந்திய பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், குறித்த கட்டிடத்தில் இரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த தீ விபத்தினால் அந்த இரசாயனங்கள் எரிந்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்குமா என்பதனை ஆராய்வதற்கான நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்’ என்று தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News